Sunday, January 26, 2020

திருமறைச்சேரி அருள்மிகு சுந்தரநாயகி சமேத நாகநாதர் ஆலயம்!

*900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்*

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், திருமறைச்சேரி அருள்மிகு சுந்தரநாயகி சமேத நாகநாதர் ஆலயம் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல சிறப்புகள் மிக்க சிவாலயமாகும்.

இடைப்பட்ட காலத்தில் சமணர்களால் இடிக்கப்பட்டு வழிபாடற்ற நிலையிலிருந்ததை கண்டு உழவாரப்பணிக்குழுவின் துணையுடன் கடந்த 9 ஆண்டுகாலமாக மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 2016ல் திருப்பணி துவங்கி 2018 சூன் 4ம் நாள் அம்மையப்பனுக்கு வெகு சிறப்பாக குடமுழுக்கு நடந்தேறியது.

ஆலயத்தின் சிறப்புகள்.

(i) 900 ஆண்டுகள் பழமையான சிவாலயம்.
(ii) ராகு கேது பரிகாரஸ்தலம்.
(iii) 4வேதங்களும் வழிபட்ட ஆலயம்.
(iv) சூரியன் வழிபட்ட சிறப்பு வாய்ந்த ஆலயம், (சூரிய வழிபாடு பங்குனி 4, 5, 6, 7, 8.)
(v) 5.6 அடி உயர அம்பாளின் கம்பீரத்தோற்றம்.
(vi)சிவகரந்தை.
(vii) தோஷமில்லா ஊர் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.
(viii) காணாமல் போன பொருட்கள் கிடைக்க இங்குள்ள பைரவரை மனதார வணங்கி வழிபட நிச்சயம் திரும்பக்கிடைக்கும், அனுபவப்பூர்வ உண்மை.

இறைவனுக்குரிய வாசனை மிக்க சிவ கரந்தை எனும் செடி அபூர்வமாக காணப்படும் ஆலயமாகவும் விளங்குகின்றது.

கிராம சிவாலயம் என்பதால் வருமானம் இல்லாத திருக்கோயில். வரும் காலங்களில் பிரதோச வழிபாட்டிற்கும் , தேய்பிறை அட்டமி வழிபாட்டிற்கும், மாத பௌர்ணமி வழிபாட்டிற்கும் உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.

தொடர்பிற்கு

ப.முத்துக்குமரன்
+919840063124 மற்றும் +919080224250.

பண உதவிக்கு திருக்கோயில் வங்கிக்கணக்கு விபரம்.

Naganathar trust,
indian bank, tiruthuraipoondi branch,
CURRENT AC-NO; 6469348441
IFSC; IDIB000T042

Thirumaraichery Naganathar Kovil(Google Maps) - https://maps.app.goo.gl/FQv5hguzFq193vBD7








*திருச்சிற்றம்பலம்*

தகவல் சேகரிப்பு உதவி 

1) https://www.vikatan.com/spiritual/temples/122233-thirumaraicheri-naganathar-and-ambikai-temple

2) https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2018/jun/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2930537.html




Monday, November 26, 2018

சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள், எக்கக்குடி, இராமநாதபுரம்

சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள்,எக்கக்குடி, இராமநாதபுரம்.(திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை மிக அருகில்)

 ஸ்ரீ செல்லப்ப சுவாமிகள்  , சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரும், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருநாதருமாவார். செல்லப்ப சுவாமிகள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூர் என்ற ஊரில் அவதரித்தார். தன் குருநாதர் போன்று, பல சித்துகள் செய்தவர்.

சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் மன்னார்குடியில் தோன்றி, கட்டிக்குளம் குவளைவேலி, புதுக்குளம் கிராமங்களில் கோயில்கள் எழுப்பி சித்துகள் பல செய்து, பக்தர்களுக்கு அருள்புரிந்தவர். அவர் வழிவந்த தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள், தங்கள் குரு ராமலிங்க சுவாமிகள் பெயரில் பல இடங்களில் மடங்களை நிறுவினார்.

ராமநாதபுரம் திருச்சுழி என்று வெவ்வேறு இடங்களில் ஆரிய சித்துகளைச் செய்து சஞ்சரித்து வந்த செல்லப்ப சுவாமிகள் ஒருநாள், ராமநாதபுரம் கண்மாய் மடக் குழியில் இறங்கினார். வெகுநேரம் அவரைக் காணாமல் அன்பர்கள் தவித்தனர். ஆனால் சுவாமிகள் அப்போது ராமநாதபுரம் அரண்மனை வாசலில் இருந்து கொண்டு ராஜாவுக்கு அவரது நோய்க்கான பச்சிலை மருந்துக்ளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.அன்பர்கள் இதைக் கண்டு அதிசயித்துப் போயினர். அன்று முதல் ராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதி அவரைப் பெரிதும் போற்றி வந்தார். இத்தகைய சிறப்புகளுடன் திகழ்ந்த செல்லப்ப சுவாமிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மாயாண்டி சுவாமிகள், அவரையே குருவாகக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து உபதேசம் செய்து வைத்தார்.

கட்டிக்குளத்தில் இருந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள், கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பின்னர் இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.

சுவாமிகள் சமாதி, பிரபல திருக்கோயில்கள் உடைய திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை ஆகிய இடங்களுக்கு, மிக அருகில் உள்ளது. அடியார்கள் பார்த்து வழிபட வேண்டிய ஒரு மகான். தொடர்புக்கு - 09843287501

Google Location -  https://goo.gl/maps/vpF45LFy51x







Chellappa Swamigal is the guru of Mayandi Swamigal. Chellappa Swamigal is a disciple of Ramalinga Swamigal. He served his guru, when the latter was in ;
Chellappa Swamigal was born in Thanjakoor, a village via Thiruppachetti in Sivaganga District. When he came to Kattikulam around 1890, Mayandi Swamigal prayed to Chellappa Swamigal and became his disciple. There is Chellappa Swami Madam in Kattikulam, where sadhus take rest when they go to Rameswaram by walk
Chellappa Swamigal was a great yogi and siddha purusha. He has cured illness of many devotees, and granted boons for getting children.
He attained Mahasamadhi at Ekkakudi near Utharakosamangai in Ramnad District.

Tuesday, November 7, 2017


வணக்கம் , புதுவை (Pondy/Puducherry) மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதியில் சமாதி அடைந்த சித்தர்கள், மகான்கள் பற்றிய PDFய் இலவசமாக இறக்கம் செய்ய http://docdro.id/O4SMrs2 கிளிக் செய்யவும். இணையத்தளம் பார்க்க - http://esanoruvanae.blogspot.in . நன்றி !!
Pondy Jeeva Samathi / Puducherry Sithars !!!

Saturday, September 13, 2014

முதியவர் ஒருவர் கவனித்து வரும் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவாலயம்!! சின்ன நரிமேடு அருள்மிகு பிரகன் நாயகி உடனூறை ஸ்ரீ தென்காங்காபுரீஸ்வரர் ஆலயம்!!

முதியவர் ஒருவர் கவனித்து வரும் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவாலயம்!! 
கடலூர் அருகே - சின்ன நரிமேடு அருள்மிகு பிரகன் நாயகி உடனூறை ஸ்ரீ தென்காங்காபுரீஸ்வரர் ஆலயம்!!

முதியவர் ஒருவர் தனியே கவனித்து வரும் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவாலயம்!!

கடலூர் அருகே சின்ன நரிமேடு கிராமத்தில் உள்ளது மிகவும் தொன்மையான அருள்மிகு பிரகன் நாயகி உடனூறை ஸ்ரீ தென்காங்காபுரீஸ்வரர் ஆலயம்.



கோயில் அருகில் உள்ள குளம். 
கரும்பு தோட்டத்துக்கு இடையே கோயில்.


பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் கி.பி 7-8 நூற்றாண்டை சேர்ந்தது. சோழர் மற்றும் கடைக்கால பாண்டியர் காலத்தில் பராமரிக்கப்பட்டு உள்ளது  என்று இத்திருக்கோயில் கிடைத்த கல்வெட்டில் இருந்து தெரிகிறது. இதன் முற்காலப் பெயர் அறந்தாங்கி நல்லூர் ஆகும்.

2004ஆம் ஆண்டு இடிந்து போய் மண்மேடிட் இருந்த இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலையும் , 10ஆம் நூற்றாண்டைசேர்ந்த அம்மன் சிலையும், சோழர் காலத்தை சேர்ந்தது என ஆய்வில் தெரிகிறது.

திருகோயில்


திரிசூல கல்வெட்டு:

இங்கு கண்டெடுக்கபட்ட ஒரு கல்வெட்டில் திரிசூலம் பொறிக்கபட்டுள்ளது. ஆறாம் மாற்வர்ம விக்கிரம பாண்டியனின் மந்திரிகளில் ஒருவனான அபிமானதுங்கப் பல்லாவராயன் இக்கோவிலுக்கு அளித்த நன்செய் புன்செய் நிலங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பூமியில் கிடைத்த திரிசூல கல்வெட்டுடன் முதியவர்

பூஜை செய்ய தயார் ஆகும் முதியவர்.


இடிந்துபோன நிலையில் உள்ள இக்கோயில், ஒரு முதியவர் தங்கி கவனித்து வருகிறார். போதிய மக்கள் வருகை இல்லாத கோயில்களில் இதுவும் ஒன்று என பார்த்த உடன் தெரிவது, வருந்த வேண்டிய ஒரு விஷயம்.




இக்கோவில் கடலூரில் இருந்து திருமானிக்குழி வழியாக பண்ரூட்டி செல்லும் வழி தடத்தில் உள்ளது. செல்லும் பொழுது முதியவருக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களும் வாங்கி செல்லுங்கள். முதியவர் சொந்தம் என்று சொல்லும் இரண்டு மூன்று பைரவர்களுக்கு முடிந்தால் பிஸ்கட் வாங்கி செல்லுங்கள்.
முதியவர் சொந்தம் என்று சொல்லும் இரண்டு மூன்று பைரவர்கள்.
 
தினத்தந்தியில் 16-2-2004 வெளிவந்த கோயிலை பற்றிய செய்தி .

Sunday, August 31, 2014

அருள்மிகு மரகதவல்லி,மாணிக்கவல்லி சமேத மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் - தவசிமடை, திண்டுக்கல் / Arulmigu Maragathavalli, Manikavalli Sametha Magalingeshwarar Temple - Thavasimadai, Dindugal.

அருள்மிகு மரகதவல்லி,மாணிக்கவல்லி சமேத மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் - தவசிமடை, திண்டுக்கல்

Arulmigu Maragathavalli, Manikavalli Sametha Magalingeshwarar Temple - Thavasimadai, Dindugal



அருள்மிகு மரகதவல்லி,மாணிக்கவல்லி சமேத மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். The temple stands here for more than 1000 years. 

மகம் நட்சத்திர திருக்கோவில் - மகம் நட்சத்திர நாளில் இங்கு விசேஷ பூஜைகள் நடக்கும். 
The temple belongs to star Magam and special poojas are performed during magam-star day.



பரத்வாஜ மஹரிஷி இங்கு வாழ்ந்ததாக ஐதீகம். அவருடைய சமாதி கோயிலில் முன்பாக உள்ளது. இரு பீடங்களை உள்ள சமாதியை கடந்துதான் கோயில் உள்ளே செல்ல முடியும். இக்கோவிலில் இரண்டு அம்பிகைகள் இருப்பது மிகவும் அபூர்வமான அமைப்பு. இச்சா, கிரியா சக்திகளாக இவர்கள் விளங்குவதாக ஐதீகம். சிவலிங்கத்திற்கு எதிரே பைரவர் "ஆதி பைரவராக" காட்சி அளிக்கின்றார். 
Saint Barathwaj believed to have lived here and his samathi is found in-front of the temple. All devotees should need to cross the two small pillar to enter the temple. There are two goddesses in this temple and believed to be representing Icha & Kiriya shakthis. Such form is very rare. The Bairava in-front of the Sivalinga is called as "Aathi Bairava".  





கோயிலின் சிறப்புகள் 

1) அதி பைரவர் முதன் முறையாக உருவான ஸ்தலம்.
2) ஸ்ரீ ராமரும் , ஆஞ்சநேயரும் தரிசித்த இடம். தனக்கு உதவிய ஆஞ்சநேயரும் உணவு இட்ட இலையை இரண்டாக பிரிக்க , நடுவில் கொடு போட - வாழை இலை பிறந்ததாக நம்பப்படுகிறது. ஸ்ரீ ராமர் சந்தியாவந்தன பூஜைகள் செய்த பாஸ்கரச்சரயு இருத்த இடம் இதுதான் என்று நம்பப்படுகிறது. 
3) அயோத்தியுடன் சூக்கும ரீதியான பூமியடி தொடர்புடைய ஸ்தலம். 

Temple Specialities

1) The first ever "Athi Bairavar" believed to have originated in this place. 
2) Sri Ramar and Anjaneyar have visited this place. In order to give half of the food provided to him to Aanjaneya, he draw a line across the leaf. Since this incident, all banana-leaf got the formation like today and so this place is considered to be the birth place of banana leaf. 
3) Lord ram performed Santhiyavanthana pooja's in the banks of Baskarasarayu - believed to have existed here. 










கோயில் காட்டின் நடுவில் இருப்பது போலத்தான் அமைப்பு இருக்கிறது. கோயிலை சுற்றி சுவர், கோபுர கட்ட முற்பட்ட அனைத்து தருணங்களிலும் தடங்கள் வந்தமையால் அப்படியே விட்டுவிட்டார்கள் என்று கோயில் பூசாரி கூறினார். சிவலிங்கத்தின் இடது முன்புறத்தில் கடந்து இருநூறு ஆண்டுகளில் ஜீவ சமாதி அடைந்த இருவர், மூவரது சமாதிகள் உள்ளன. 

The temple surroundings reminds us of a forest area and situated in a woodland. Many efforts to built walls and gopuras have failed and devotees have stopped taking any efforts. The local priest said it is God's wish to remain the way it is. In front of the Shiva linga, to the left there are few jeeva samathis who attained mukthi in this place.  




செல்லும் வழி

திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் பேருந்தில் விராலிப்பட்டியில் இறங்கி அங்கிருந்து ஶேர்ஆடொவிலொ அல்லது சிற்றுந்தில் சென்றாள் தவசிமடை அடையலாம். 

Way to Temple

From Dindugal, take bus that goes to Natham and get down at Viralipatti junction. From the junction, take share autos or buses to reach Thavasimadai. 

Viralipatti Kottu Rodu/விராலிப்பட்டி


Reference

1) http://temple.dinamalar.com/New.php?id=753
2) http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-mahalingeshwarar-thirukoyil-t313.html 

பெங்களூரு மடிவாளாவில் உள்ள புராதான சோமேஷ்வரா திருக்கோவில்/ Bengaluru – Madiwala -Someshwara Temple

பெங்களூரு மடிவாளாவில் உள்ள புராதான சோமேஷ்வரா திருக்கோவில்  
Bengaluru – Madiwala -Someshwara Temple


இறைவன் அருளால் - பெங்களூரு மடிவாளாவில் உள்ள புராதான சோமேஷ்வரா திருக்கோவில் செல்லும் பாக்கியம் இன்று கிட்டியது. பெங்களூரு மாநகரில் மிகவும் பழைய கோயில்களில் இதுவும் ஒன்று. மடிவாளா ஆஞ்சநேயர் சிலையில் இருந்துநடக்கும் தொலைவில் உள்ளது. சோழ அரசர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இறைவன் சுயம்பு சிவலிங்கமாக காட்சி தருகிறார்.


The siva temple is one of the oldest temple in Bengaluru. It’s walk able from the Madiwala Anjaneya statue. The Chola rulers built the temple way back in the 12th century. Siva linga in this temple is Suyambu.


கோயில் நுழை வாயில் - Temple Entrance

கோயிலில் உள்ள புராதான மரம். Old tree inside the tree.

கோயிலில் உள்ள புராதான தூண். Ancient stone pillar inside the temple. 

தமிழில் உள்ள கல்வெட்டுகள் - Tamil inscription on the temple walls. 


Reference

1) http://en.wikipedia.org/wiki/Old_Madiwala_Someshwara_Temple,_Bangalore
2) http://swamisblog.blogspot.in/2008/01/my-visit-to-ancient-temple-sri.html



Sunday, May 11, 2014

Odukathar Swamigal - Jeeva Samathi- Ulsoor , Bengaluru
டுக்கத்தார் சுவாமிகள் - ஜீவ சமாதி- உல்சூர், பெங்களூரு

யாம் பெற்ற இன்பம் பெருக இவையகம்! என்னை போல், நீங்களும் சென்று வணங்கி - அருள் பெறுங்கள்! ஒம் நமசிவாய !!


Swamigal was born in village caleed Odukathur near Vellore.  Leaving the family in his early years , he wandered in search of God that took him to Kalahasti, Kanchi, Tiruvanikkaval, Chidambaram, Rameshwaram and finally reached Vellore. He spent majority of his life in the forest of Odukathar where he has said to have attained siddi. He was briefly missing after a heavy flood and the local cow boys found him in deep samathi state covered with sand near the river bed. 

சுவாமிகள் வேலூர் அருகே உள்ள ஒடுக்கத்தூரில் பிறந்தவர். சிறு வயதில் கடவுளை தேடி குடும்பத்தை விட்டு வெளியேறிய சுவாமிகள் - காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவனைக்காவால், சிதம்பரம், ராமேஷ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று கடைசியில்  வேலூர் அருகில் உள்ள ஒடுக்காத்தர் காட்டுப்பகுதில் வந்தடைந்தார். இங்கு பலகாலம் தங்கிய சுவாமிகள் சித்தி நிலை அடைந்ததாக தெரிகிறது. ஒரு முறை பலத்த மழை காரணமாக வெள்ளம் எற்பட, சுவாமிகள் சிலகாலம் காணாமல் போய்விட்டார். மாடு மேய்கும் சிறுவர்கள் இவரை தேட, சமாதி நிலையில் ஆற்றின் கரையில் மணல் மூடிய நிலையில் கண்டு மீட்டனர். 

He spoke very rarely and many times lived only on air without eating or drinking . He came to Bengaluru in the year 1914 and entered Mahasamathi in 1915. 
அதிகம் பேசாத சுவாமிகள் ,உணவோ - நீரோ பருகாமல் பலநாட்கள் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ்ந்தார். 1914 இல் பெங்களூரு வந்த சுவாமிகள் 1915 இல் மஹாசமாதி அடைந்தார்.

Ulsoor  Sri Dhandayuthapani swamy temple in which the Samathi is located. 
சுவாமிகள் சமாதி, உல்சூர் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளே உள்ளது.  


Reference

1) http://www.odukathurmutt.org/history/history1.html
2) http://odukkathurswamigal.blogspot.in/2012/10/life-of-sri-mahan-odukathur-swamigal.html